Friday, May 23, 2008

அரசு மாணவர் விடுதிகளில் அட்மிஷன்!

http://www.kalvimalar.com/
சென்னையில் உள்ள அரசு மாணவர் விடுதிகளில் தங்குவதற்கு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து;வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு திருவான்மியூர், சைதாபேட்டை, ஓட்டேரி, மயிலாப்பூர், வடபழனி, லேடி வில்லிங்டன் பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு 7 விடுதிகளும், மாணவியர்க்கு ஒரு விடுதியும் உள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஓட்டேரி மற்றும் சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் இரண்டு விடுதிகள் உள்ளன. நான்காம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, இளநிலை, முதுநிலை, பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்களும் இந்த விடுதிகளில் தங்கி தங்களது படிப்பை தொடரலாம். தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டு பள்ளி சீருடைகளும் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஆலோசனை முகாம்களும் நடத்தப்படுகிறது. இந்த விடுதிகளில் சேர மாணவர்களின் குடும்ப வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலவாரியத்தில் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் பள்ளி மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை ஜூன் 30ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் ஜூலை 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு... http://www.kalvimalar.com/

No comments: